யாழில் சிறுவனை மோதிதள்ளி விட்டு தப்பிச் சென்ற மோட்டர் சைக்கிள்
வீதியின் குறுக்கே சென்று கொண்டிருந்த சிறுவனை வழியில் வேகமாகப் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது. இந்த விபத்துச் சம்பவம் ஏ -9 வீதி நாவற்குழி சந்தியில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த சிறுவனை அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதேவேளை மோட்டார் சைக்கிளில், விபத்தை ஏற்படுத்தி தப்பிச்சென்ற நபர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குச் சென்றுள்ளார் எனவும் தெரி விக்கப்பட்டுள்ளது.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed