யாழில் சிறுவனை மோதிதள்ளி விட்டு தப்பிச் சென்ற மோட்டர் சைக்கிள்

வீதியின் குறுக்கே சென்று கொண்டிருந்த சிறுவனை வழியில் வேகமாகப் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது. இந்த விபத்துச் சம்பவம் ஏ -9 வீதி நாவற்குழி சந்தியில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த சிறுவனை அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதேவேளை மோட்டார் சைக்கிளில், விபத்தை ஏற்படுத்தி தப்பிச்சென்ற நபர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குச் சென்றுள்ளார் எனவும் தெரி விக்கப்பட்டுள்ளது.